Thursday, January 1, 2015

01  திவ்ய முத்துக்கள் 





உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்

துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே




பாசுர தொகுதி
பாசுர எண்
பாசுரம் அருளியவர்
அருளிய காலம்
பாசுர நோக்கம்
பாசுரம் பெற்ற திவ்யதேசம்
முதலாயிரம்
2791
3059 BC
இறைவனடி தொழுதல்


நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின் முதற்பாடல் இது. இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். 
உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான். 

மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். 

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். 

துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே
அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.

No comments:

Post a Comment